02 December 2008

கடவுள் உண்டு நிரூபணம்

மனிதன் இந்த உலகை பார்க்கிறான்... தாவரங்கள், விலங்குகள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள். அவற்றில் ஒருவகை வடிவமைப்பை பார்க்கிறான்... ஒருவகை படைப்பை பார்க்கிறான்... ஓருவகை ஒழுங்கை பார்க்கிறான். அவன் கேட்கிறான், யார் இதைப் படைத்தார்? இந்த தெரியாத ஒழுங்கை படைத்தவரை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கு = கடவுள்]

மனிதன் சக மனிதன் நோய்வாய் படுவதையும், இறப்பதையும் பார்க்கிறான். அவனுக்கு ஏனென்றோ, யார் செய்தாரென்றோ தெரியவில்லை. மேலும் அவனை சுற்றி நடக்கும் பல விசயங்கள் அவனுக்கு புரியவில்லை. அதில் எந்த காரணமும், முறையும், ஒழுங்கும் அவனுக்கு தெரியவில்லை. எந்த காரணமும், முறையும் அற்று ஒழுங்கின்றி தோன்றினாலும், இதை யாரோ சில காரணங்களுக்காக செய்கிறார் என்று நினைக்கிறான். இந்த தெரியாத ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள காரணகர்த்தாவை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கின்மை = கடவுள்]

மொத்தத்தில், அவனை வியப்பில் ஆழ்த்தும் ஒழுங்கு ஆகட்டும், அல்லது குழப்பமூட்டும் ஒழுங்கின்மை ஆகட்டும், அவனுக்கு தெரியாததை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [தெரியாதது = கடவுள்]

பிறகு, சில தெரியாதவற்றுக்கு சில காரணங்களையும், முறையையும் கண்டறிகிறான். சில ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை உணர்கிறான். எல்லா ஒழுங்கற்றவைகளுக்கு பின்னும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இப்பொழுது, ஒவ்வொரு ஒழுங்கற்றவைக்கு பின்னுள்ள ஒழுங்கை காண முயற்சிக்கின்றான். அப்படி, மேலும் மேலும் பல ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிகிறான். ஆனால், ஒரு ஆழ்ந்த அடிப்படையான ஒழுங்கின்மையில் தடுமாறுகிறான். அந்த அடிப்படை ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிய மேலும் மேலும் கடுமையாக முயற்சிக்கின்றான்.

இப்பொழுது மெதுவாக ஒரு பெரிய அடிப்படை இயற்கை விதியை உணர்கின்றான்: இயற்கை முழு-ஒழுங்கின்மையை (சமநிலை) நோக்கியே செல்லும். அதுவே இவ்வுலகின் முடிவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு முழு-ஒழுங்கின்மையை நோக்கி செல்லும் போது, தற்காலிகமாக எப்படி சில ஒழுங்கு (அண்டம், நட்சத்திரங்கள், கோள்கள், உயிர், மனம் ஆகியவைகள்) உருவாக முடியும் என்பதையும் உணர்கின்றான். இவ்வாறாக, அவன் சில ஒழுங்கானவைகளுடன் (உறுதியான, நம்பகமான) மற்றும் ஒழுங்கின்மைகளுடன் (உறுதியற்ற, நம்பகமற்ற) வாழ்கின்றான். இது உண்மையாக இருந்தாலும், ஏன் இயற்கை இப்படி இருக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியவில்லை. அவன் தன் தேடலை தொடர்கின்றான்.

எப்படியாகிலும், இவ்வுலகின் தொடக்கத்தின் மூலக்காரணத்தை நோக்கும் போது ஒரு ஆழ்ந்த புதிரை அவன் உணர்கின்றான். மேலும், அவனால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று வியக்கின்றான். எப்பொழுதும் போல், பலர் இந்த தெரியாததை கடவுள் என விரைந்து முடிவு எடுக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டும், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாதது என உணர்கின்றனர்.

கடைசியில், எப்படியாகிலும் [கடவுள் = தெரியாதது]. கடவுள் உண்டா? உண்டு; ஏனென்றால், தெரியாதது இன்னும் இருக்கிறது. ஆனால், கடவுள் என்பது நீ நினைப்பது அன்று; ஏனென்றால், அது தெரியாதது!

தீவிர-வாத நோய்

எனக்கு ஒரு குழந்தைப் பருவ கதை ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு காதல் பறவைகள் தங்கள் குடும்பத்திற்காக மிக கடினமான உழைப்பில் ஒரு அழகான கூடு கட்டின. ஒரு நாள், நீண்ட இரை தேடலுக்கு பிறகு கூடு திரும்பின. அவைகளின் கூட்டை வேறு ஒரு பறவை ஆக்கிரமித்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. காதல் பறவைகள் அவனிடம், "இது எங்களுடைய கூடு. இதை நாங்கள் மிகவும் கடின முயற்சியில் கட்டினோம்" என்றன. அவனோ, "நான் இக்கூட்டை இங்கு யாருமின்றி பார்த்தேன். இப்பொழுது இது என்னுடையது" என்றான். காதல் பறவைகள் அவனிடம் பல நாட்கள் தொடர்ந்து போராடின. பிறகு, காதல் பறவைகள் இதற்காக விரையமான நேரத்தையும், சக்தியையும் உணர்ந்தன. புதிதாக வேறு இடத்திற்கு சென்று தங்கள் குடும்பத்தை ஆரம்பித்தன.

நம் உலக வரலாற்றில் பல கரைகள் உள்ளன. மக்கள் தவறுகளை செய்துள்ளனர், செய்து கொண்டும் உள்ளனர். இங்கு பிழையற்ற நாடோ, சமூகமோ, இனமோ இல்லை. உன் பக்கமே சரி என்று வைத்துக் கொண்டாலும், கடந்து போன விசயங்களுக்காக எவ்வளவு நாள் போராட்டம் தேவையானது? உனக்கோ, உன் சந்ததிக்கோ அது எப்படி பட்ட பலன் பயக்கும்? உன்னை அடிமையாக வாழ சொல்ல வில்லை; ஆனால் உன்னால் அமைதிக்காக ஓரளவு நியாயமான உடன்பாடு செய்ய முடியுமா? உன் அமைதிக்காக! உன் குழந்தைகளின் அமைதிக்காக! எப்படி பார்த்தாலும், நீ கொல்லும் அப்பாவி மக்கள் உன் உண்மையான எதிரிகள் அல்லவே!

இதை நன்றாக ஞாபகத்தில் வை... அழித்தல் என்பது மிக எளிதானது. நீ பெரிதாக ஒன்றை சாதித்து விட்டாய் என்று கர்வப் படாதே. உண்மையாக சாதிக்க, நீ ஒன்றை உருவாக்க வேண்டும்... உன் நாட்டை, இனத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்; அங்கு சுதந்திரமும், அறிவும் பொங்க வேண்டும்... ஆணும் பெண்ணும் சரிநிகர் காண வேண்டும்... எல்லோரும் வறுமையற்ற மகிழ்ச்சி காண வேண்டும்! இதை நீ இவ்வுலகிற்கும், உன் எதிரிக்கும் கர்வத்துடன் காண்பி!

ஒன்றை நான் மறந்தே போனேன்... இவைகளெல்லாம் உன் அறிவிற்கே எட்டாதென்று. நீ எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கையையே பின்பற்றுகின்றாய். அதற்கு இந்த சமூகமும் காரணம். இங்கு எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கைகள் பாலாபிசேகத்துடன் வரவேற்கப் படுகின்றன. இது அப்பட்டமாக பின்பற்றும் கொடுரத்திற்கு ஒரு பாளமாக, அடிதளமாக, ஒழிவிடமாக அமைகின்றது.

ஒரு கிராமமாக சுருங்கி போன இவ்வுலகத்தில் முன் எப்பொழுதை விட, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். இதில் ஒரு சமூகமோ, இனமோ, நாடோ கீழே போனால், அதை கைக் கொடுத்து தூக்கி விடவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை; இல்லையென்றால், அது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும். நம்மிடம் பலவற்றை உருவாக்கும் அறிவும், ஆற்றலும் இருக்கு... சில வினாடிகளில் இவ்வுலகையே அழிக்கும் ஆயுதங்களும் இருக்கு! ஒன்றாக நாம் உயர முடியும்... இல்லையென்றால் ஒன்றாகவே வீழ்வோம்!

08 November 2008

சரியென்று பட்டதெல்லாம்

(எப்பொழுதும் போல், எந்த காரணமும் இல்லையென்றாலும் புலி மூச்சு வாங்க வேகமாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அவ்வழியே ஆமையார் வருவதைப் பார்த்ததில் சந்தோசம் தான்!...)

புலி: என்ன, ஆமையாரே எப்படி இருக்க?

ஆமை: நலம் தான். நீ கிரேக்க கண்காட்சிக்கு போவதாக சொன்னாயே?

புலி: அங்கிருந்து தான் வருகின்றேன். கிரேக்க ஞானிகள், சாக்ரடீஸ், பிலாடோ, அரிஸ்டாட்டில் பற்றிய விசயங்கள் நன்றாக இருந்தது. சமயம் வரும் போது, இவர்களுடைய தத்துவங்களைப் பற்றி நாம் பேச வேண்டும்.

ஆமை: உனக்குத் தான் தெரியுமே, எனக்கு தத்துவம் (philosophy) பிடிக்கும் என்று! (ஆமை, புலியின் கையிலுள்ள‌ பேப்ப‌ரை க‌வ‌னிக்கின்றான்...) என்னது உன் கையில்?

புலி: இது சாய்ந்த‌-கோபுர‌-மாயைப் ப‌டம். 2007 வ‌ருட, க‌ண் மாயை ப‌ட‌ போட்டியில், இதற்க்கு முத‌ல் பரிசு கிடைத்த‌து. (புலி ப‌ட‌த்தை ஆமைக்கு காட்டுகின்றான்...) இந்த இரண்டு படமும், ஒரு அச்சு கூட மாறாமல் ஒரே படம் தான்...‌உன்னால் ந‌ம்ப‌ முடிகிற‌தா?

ஆமை: வழ‌துகைப் ப‌க்க‌ம் உள்ள‌ கோபுர‌ம் அதிக‌மாக‌ சாய்ந்துள்ள‌து போல் இருக்கிற‌து.

புலி: ந‌ம் க‌ண்ணால் பார்ப்ப‌தெல்லாம் சரியென்று சொல்ல‌ முடியாது என்றே நினைக்கிறேன்!

ஆமை: "கண்ணால் பார்ப்ப‌தும் பொய்யாக‌லாம்!
காதால் கேட்ப‌தும் பொய்யாக‌லாம்!
உணர்வுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
மனதிற்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
சுய அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
பொது அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
ஆழ‌மான ஆராய்சி ம‌ட்டுமே உண்மையை விள‌க்கலாம்!

புலி: ம்ம்ம்...ந‌ல்ல த‌த்துவ‌ம் தான்! அது எப்படி ந‌ம் மனதிற்கு/அறிவுக்கு சரி என்று பட்டது பொய்யாக‌லாம்?

ஆமை: சாக்ர‌டீஸ் காலத்திலும் (469-399 கி.மு), அத‌ற்கு ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் முன்னும் பின்னும், ந‌ம‌து மனதிற்கு/அறிவுக்கு சரி என்று பட்டதெல்லாம் உண்மையாக கருதப்பட்டது. வாழ்கை த‌த்துவ‌திற்கெல்லாம் இதுவே ஆதார‌மாக‌ இருந்த‌து. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த‌, க‌லிலியோ க‌லிலிலை (1564-1642 கி.பி) சோத‌னை முறையில் ந‌ம் அறிவுக்கு சரி என்று பட்டது த‌வ‌றாகவும் இருக்காலாம் என்று நிரூபித்தார். க‌தையின் ப‌டி, பெரிய‌ மக்க‌ள் கூட்ட‌த்திற்கு முன், இர‌ண்டு குண்டுக‌ளை, ஒன்று க‌ன‌மான‌து ம‌ற்றொன்று க‌ன‌ம‌ற்ற‌து, பைசா கோபுர‌த்திலிருந்து ஒரே நேர‌த்தில் கீழே போட்டார். க‌ன‌மான‌ பொருள் வேக‌மாக‌ பூமியை அடையும் என்று ந‌மது அறிவுக்கு (இயல்பறிவுக்கு) ப‌டுகின்ற‌து. ஆனால், இர‌ண்டு குண்டுக‌ளும் ஒரே நேர‌த்தில் பூமியை அடைந்த‌து!

புலி: ஆச்ச‌ர்ய‌ம் தான்! அது எப்ப‌டி சாத்திய‌ம்?

ஆமை: ஏனென்றால் புவியீர்ப்பு முடுக்க‌ம் (9.8 m/s2) எல்லா பொருளுக்கும் ஒன்று தான்! இது கற்பிக்கும் முக்கிய‌ பாட‌ம், ந‌மது இயல்பறிவுக்கு (Common sense/ Intuition) ச‌ரியாக‌ ப‌டுவ‌தெல்லாம் த‌வ‌றாகவும் இருக்காலாம் என்பதே!!! உண்மையை க‌ண்ட‌றிய‌, ஆழ்ந்த‌ ஆராய்சி தேவை. இந்த‌ ஆழ்ந்த‌ ஆராய்சி முறையை தான், நாம் அறிவிய‌ல் என்று சொல்கின்றோம். இதில், எந்த ஒரு விசயத்தையும் கண்கானித்தல், கண்கானித்ததிலிருந்து அதன் பொருள் என்னவாக இருக்குமென‌ கணித்தல் (தியரி), தியரியிலிருந்து கண்கானித்த அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் அளித்தல், தியரியிலிருந்து மேலும் புதியவற்றை கண்டுபிடித்தல், அதை பரிசோத‌னை செய்து நிரூபித்த‌ல்...ஆகிய‌வை அட‌ங்கும்.

புலி: பூமி உருண்டை என்றாலும், நம் அறிவுக்கு த‌ட்டையாக‌ தெரிவ‌தும் இதுபோல் தானே?

ஆமை: ஆமாம்! அதே போல், சூரிய‌ன் ந‌ம் பூமியை சுற்றுவ‌தாக‌ தெரிந்தாலும், உண்மையில் நாம் சூரிய‌னை சுற்றுகின்றோம். இது போன்ற‌ ப‌ல‌ உண்மைக‌ளை நிலைப‌டுத்த‌, நாம் மிக பெரிய‌ தொகையை கொடுத்துள்ளோம். சூரிய‌ மைய‌ விள‌க்க‌ம், அன்றைய‌ கிருஸ்த்துவ‌ ந‌ம்பிக்கைக்கு முர‌னாக‌ இருந்த‌தால், க‌லிலியோவை சாகும் வ‌ரை வீட்டு சிறையில் அடைத்தார்க‌ள்.

புலி: சூரிய‌ மைய‌ விள‌க்க‌த்தை முத‌லில் க‌ண்ட‌ரிந்த‌ நிகோல‌ஸ் கோப‌ர்னிகஸ் (1473-1543 கி.பி) கூட‌, அதை வெளியிட‌ ப‌ய‌ந்தார் என்று ப‌டித்துள்ளேன்.

ஆமை: சார்ல‌ஸ் டார்வினும் (1809-1882 கி.பி) அப்ப‌டித்தான்! த‌ன்னுடைய‌ ப‌ரினாம‌ திய‌ரி புத்த‌க‌த்தை ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையில் தான் வெளியிட்டார். இது போல எவ்வளவு அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சி ந‌சுக்க‌ப் ப‌ட்டிருந்த‌து என்ப‌தை நினைத்தால் அதிர்ச்சியாக‌ உள்ள‌து!

புலி: ம்ம்ம்...அது ப‌ற்றி என‌க்கு எந்த‌ க‌ருத்துமில்லை. ஆனால், அது போன்ற‌ கால‌க்க‌ட்ட‌த்தை க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம் என்ப‌தில் ச‌ந்தோச‌ம் தான்!

ஆமை: உண்மையில் இது இன்னும் தொட‌ர்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌து. அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ளில் கூட‌, தண்டுவ‌ட‌‍-செல் (stem-cell) ம‌ற்றும் பல‌ உயிர் காக்கும் சோத‌னைக‌ள் தடுக்க‌ப்ப‌ட்டு கொண்டுதான் உள்ள‌து. 200 வ‌ருட‌த்திற்க்குப் பிற‌கும், ப‌ரிணாம‌ திய‌ரி எதிரான‌ போர்கொடிக‌ள் இன்னும் உள்ள‌து!

புலி: எப்படி ஆனாலும், ப‌ரிணாம‌ம் ஒரு திய‌ரிதானே... அது ஒன்றும் 100% நிருபிக்க‌ப் பட்ட‌ உண்மைய‌ல்ல‌வே?!

ஆமை: இது த‌வ‌றாக‌ நிழ‌வும் க‌ருத்தாகும். இது அறிவிய‌ல் முறை எப்படி செயல்படுகின்றது என்பது தெளிவாக‌ தெரியாத‌தால் ஏற்ப‌டும் குழ‌ப்ப‌ம். உண்மையில் நாம் எதையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் ச‌ரி த‌வ‌று என்று நிருபிக்க‌ முடியாது! நாம் இருக்கிறோம் என்ப‌தை கூட‌ 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது! உதாரணமாக ப‌ற‌க்கும் குதிரை இல்லை என்ப‌தையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது! அறிவிய‌ல் முறையில், நாம் க‌ண்ட‌றியும் விச‌ய‌த்தை வைத்து, திய‌ரி விள‌க்க‌ம் சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. அந்த‌ திய‌ரி க‌ண்டுபிடிக்கும் புதிய‌ விச‌ய‌ங்க‌ள் ஒவ்வொறு முறை நிருப‌ன‌மாகும் போதும் அத‌ன் மேல்லுள்ள‌ ந‌ம்பிக்கை அதிக‌ரிக்கும்... இல்லையென்றால் அது வ‌லுவிழ‌ந்து போகும். ரிச்ச‌ர்டு டாக்கின்ஸ் சொல்லுவ‌து போல், ப‌ரிமான‌ திய‌ரி, சூரிய‌‍-மைய‌ திய‌ரி நிக‌ராக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ரிணாம‌ திய‌ரி ப‌ல‌ முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், இப்பொழுது அது எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்றது என்ப‌தையும் நாம் க‌ண்ட‌றிந்துள்ளோம்!

புலி: என்னுடைய‌ முத‌ல் கேள்விக்கு வ‌ருவோம்... ந‌ம் ம‌ன‌திற்கு/அறிவுக்கு ப‌ட்ட‌தெல்லாம் த‌வ‌று என்கிறாய்?

ஆமை: அப்ப‌டி அல்ல‌. அது நம் மூளையை எப்படி பழக்கப்படுத்தினோம்... ப‌ய‌ன்ப‌டுத்தினோம்... ப‌யிற்சிகொடுத்தோம் என்ப‌தை பொருத்த‌து. ந‌ம‌து மூளை (மனம்/அறிவு) எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌தைப் ப‌ற்றிய‌ தெளிவு, இதை ந‌ன்றாக‌ புரிந்துகொள்ள‌ உத‌வும். ச‌ம‌ய‌ம் கிடைக்கும் போது, இதைப் ப‌ற்றியும் விவாதிப்போம். மொத்த‌தில், ந‌ம் ம‌ன‌திற்கு/அறிவுக்கு ப‌ட்டது முத‌ல் க‌ட்ட‌மே, அது இறுதி முடிவு அல்ல.

கேளிகூத்து என்னவென்றால், ஒரு பக்கம் நன்கு நிரூபிக்கப்பட்டவற்றை ஏற்க மறுக்கின்றோம்... மறு பக்கம் கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாதவற்றை, எந்த கேள்வியும் இன்றி மிக எளிதாக ந‌ம்புகின்றோம். பேய், ம‌றுபிற‌ப்பு, ஜாதகம், ராசி பலன் இவ‌ற்றிக்கு எந்த‌வித‌ அடிப்ப‌டை ஆதார‌முமில்லை. இவை ந‌ம் சிறு வ‌ய‌தில் திணிக்க‌ப்ப‌ட்டு ப‌ழ‌க்கப்ப‌ட்டு விடுவ‌தால், மிக ஆழமாக நம் உள்மனதில் ப‌திந்துவிடுகின்ற‌து. மேலும் இவை நம் அடிப்படை உணர்ச்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்திகொள்கின்றன. பிற‌கு இதை மாற்றுவ‌து மிக‌ மிக‌ க‌டின‌ம். இது ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீன‌ம் (vulnerabilities) .

புலி: ஆனால், உலகில் அதிகாமான மக்கள் இவற்றை நம்புகிறார்கள்... அதில் பலர் நன்கு படித்தவர்கள்! அனைத்து பண்டைய‌ கலாச்சாரத்திலும் இது போன்ற நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன. ஜோதிட‌த்திற்கு கார‌ண‌மும், ஆதார‌ண‌மும் உள்ள‌து. பேயை பார்த்த‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். சில‌ர் ஆவியுட‌ன் பேசுகிறார்க‌ள். இவ‌ற்றில் எந்த‌ உண்மையும் இல்லையா என்ன‌?!!

ஆமை: இதைத் தான் நான் ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீனம் (vulnerabilities) என்றேன்... உன‌க்கு இவற்றைப் பற்றி எத்த‌னை அறிவிய‌ல் பூர்வ‌மான‌ ஆதாரண‌ங்கள் தெரியும். இதை ஞாப‌க‌ம் வைத்துக் கொள்... "எந்த ஒரு அசாதாரணமான‌ விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!"

புலி: ம்ம்ம்...ந‌ல்ல அறிவியல் த‌த்துவ‌ம் தான்! :‍-) நேர‌மாகிவிட்டதென்று நினைக்கின்றேன்...

ஆமை: ஆமாம், நானும் வீட்டுக்கு செல்ல‌ வேண்டும்.

புலி: நல்லது ஆமையாரே, நாளை பார்க்கலாம்.

ஆமை: சரி...பார்க்கலாம்.

(எப்பொழுதும் போல, கூட வருவோரின் பொருமையை சோதிக்குமளவிற்க்கு, ஆமையார் அவ‌னுடைய‌ மெதுவான‌ ந‌டையைப் போட்டான்!)