03 August 2009

அறிவு பேசினால்

நான் உனக்கு அறிவை தந்தேன்...
உலகை புரிந்து நடைபோட;
கருவிகள் செய்து உயிர்வாழ - மேலும்
காலநிலை கணித்து பயிர்செய்ய.
நான் உனக்கு அறிவை தந்தேன்...
தொற்று நோய்களை களைந்தெடுக்க;
கொடிய வியாதிகளுக்கு குணம்காண;
பெருங்கடலையும் ஆகாயத்தையும் தோற்கடிக்க;
அண்ட வெளியையும் வெற்றிகாண - மேலும்
உன் காலடியை நிலவிலும் பதிக்க!

நான் அறிவேன், நான் அறிவேன்...
நான் தான் உனக்கு அறிவை தந்தேன்...
உயிர்கொல்லும் ஆயுதங்கள் செய்ய;
அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்
அது உன் விலங்கின் உணர்ச்சி;
அது உன் மடமையின் கிளர்ச்சி;
சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்
உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!

நீ என்னை காண முடியும்...
உன் நீடித்த ஆவலில்;
உன் கேள்விகளில், சந்தேகங்களில் - முக்கியமாக
உன் திறந்த மனதில்!
அறிவே ஆற்றல் - ஆனால்
நான் அகங்காரமும் அல்ல!
கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்
திறந்த மனது என் முன்நிபந்தனை!

பலநேரம், பலவற்றில்...
உன் மனதை மூடிக்கொண்டாய்;
குருட்டு நம்பிக்கைக்கு அடிமையானாய்!
அதன் ஆதாரமற்ற கொக்கரிப்புகளில்!
அதன் அகங்கார தீர்ப்புகளில்!
பாவங்கள் பற்றி பேசுகின்றாய் - கொடிய
நரகத்தின் தீயை பேசுகின்றாய் - உண்மையில்
மக்களை உயிருடன் எரிக்கின்றாய்;
அவர் ஆன்மாக்களை சபிக்கின்றாய்;
அவையெல்லாம் இந்த பூமியிலே!

உன் மனக்கண்ணை திற;
நான் இந்த உலகை காட்டுகிறேன்...
குருட்டு அகங்கார கொக்கரிப்பை விட,
மிகச் சிறப்புடனும், மாட்சியுடனும்!
உன் மனக்கண்ணை திற;
நான் நிதர்சனத்தை காட்டுகிறேன்...
மாயஜால வித்தையை விட,
பெரு வியப்புடனும், மேன்மையுடனும்!

சிந்தித்துப் பார்...
நீ சிந்திக்க முடியும் என்பதால்,
உனக்கு தெரியுமென எண்ணிவிடாதே,
சிந்திப்பது எப்படி நடக்கின்றதென்று!
நீ வாகனம் ஓட்டுகின்றாய் - அதன்
இயந்திரம் எப்படி இயங்குதென்று அறியாமல்!
நீ கேள்விகள் எழுப்ப முடியும் என்பதால்,
உனக்கு தெரியுமென எண்ணிவிடாதே,
அனைத்துக்கும் பதில் என்னவென்று!
அதற்கு பலகாலம் ஆகலாம் - அல்லது
என்றைக்குமே அகப்படாமல் போகலாம்!
அது எப்படியாகிலும் பராவாயில்லை...
உனக்கு தெரியாத போது, சொல்:
எனக்கு தெரியாது என்று!

ஆம், நீ என்னை காண முடியும்...
உன் நீடித்த ஆவலில்;
உன் கேள்விகளில், சந்தேகங்களில்;
நான் அகங்காரமும் அல்ல!
கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்
திறந்த மனது என் முன்நிபந்தனை!
என் ஆரவாரமற்ற ஆரம்பம்,
நீ சொல்லும் துணிவான வார்த்தைகளில்...
எனக்கு தெரியாது!

5 comments:

CorTexT (Old) said...

பள்ளி நாட்களில் 'ஆறு தன் வரலாறு கூறுதல்' என கட்டுரை எழுதியதுண்டு. இதுவும் அது பொன்ற ஒரு பார்வை

ஆ.ஞானசேகரன் said...

//உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!//

உண்மைதான்....
நல்லாயிருக்கு இன்னும் முயற்சித்தால் இன்னும் சுவாராசியமாக இருக்கும்.. பாராட்டுகள்

CorTexT (Old) said...

//ஆ.ஞானசேகரன் said...
உண்மைதான்....
நல்லாயிருக்கு இன்னும் முயற்சித்தால் இன்னும் சுவாராசியமாக இருக்கும்.. பாராட்டுகள்//

இதை முதலில் நான் ஆங்கிலத்தில் எழுதினேன்.
http://ecortext.blogspot.com/2009/07/knowledge-speaking.html

இது அதன் தமிழாக்கம்; எனக்கு திருப்தியாக இல்லை. அது ஏனோ தெரியவில்லை, அறிவியல் சம்பந்தமாக விசயங்களை தமிழிலில் எழுதும் போது, ஏதோ ஒன்று குறைந்தது போலுள்ளது. தமிழை நாம் அறிவியலுக்கு ஒழுங்காக பயன்படுத்தாததால் வந்த வினை என்று நினைக்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

:)) ஹ்ம்ம்ம் அழகாக கோர்க்கப்பட்டிருக்கிறது.

//அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்
அது உன் விலங்கின் உணர்ச்சி;
அது உன் மடமையின் கிளர்ச்சி;
சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்
உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!


nicely imposed... உணர்ந்து கூறப்பட்ட வரிகள். Enjoyed reading it, thanks!

CorTexT (Old) said...

மிக்க நன்றி தெகா!

நம் மூளையின் அமைப்பு உள்ளிருந்து வெளியாக பல அடுக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் காட்டில் விலங்குகளாக இருந்தது போது வளர்ச்சி அடைந்த உள்-மூளை (hard-coded; மாற்ற முடியாதது) நம் உணர்ச்சிகளை கொடுக்கின்றது. அது கொடுப்பது தான் நம் கோபம், சீற்றம், சண்டை முதலியன (நாம் இப்பொழுது காட்டில் வாழ்வதில்லை என்பது அதற்கு தெரியாது. அதனால், இணையதளத்தில் உரையாடும் போதும், அது மிக எளிதாக வெளிப்படுகின்றது). அதற்கு அடுத்த கட்டமாக வளர்ச்சி அடைந்த வெளி-மூளை (soft-coded; மாற்ற முடிந்தது) நாம் சிந்தித்து நம் உள்-மூளையின் செயல்களை தேவையானபடி கட்டுபடுத்துகின்றது. அதனால், நம் அறிவு வளர வளர (கற்றல்), நம் விலங்கு உணர்ச்சிகள் குறைந்து, நாம் சமாதானம் காண முயற்ச்சிக்கின்றோம். ஆனால், அந்த அறிவு முறையாக எல்லோரையும் சென்றடையாத போது, அறிவில் அறிந்த அணுசக்தி, நல்ல ஆற்றலுக்கு பயன்படாமல், சிலரின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகிப் போய்விடலாம்.